தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது, மாநிலம் முழுவதும் 34 மையங்களில் தேர்தல் அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்தனர்.

17 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

மத்திய அமைச்சரும், தெலுங்கானா பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி, கட்சியின் பொதுச் செயலர் பண்டி சஞ்சய் குமார், மூத்த தலைவர் ஈடலா ராஜேந்தர், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, பாஜக போட்டியாளரான மாதவி லதா உள்ளிட்ட பல தலைவர்களின் கதி மாலைக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.