புது தில்லி, கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹாரில் அமைந்துள்ள மதர் மேரி பள்ளிக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி வளாகம் காலி செய்யப்பட்டு உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு கண்டறியும் குழு, வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.