புதுதில்லி, டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, தேசிய தலைநகருக்கு தண்ணீர் வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

லோக் நாயக் மருத்துவமனையில் அவசர ஐசியூவில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 'எக்ஸ்' பதிவில் கூறியுள்ளது.

"நீர் அமைச்சர் அதிஷியின் உடல்நிலை மோசமடைந்தது. அவரது இரத்த சர்க்கரை அளவு நள்ளிரவில் 43 ஆகவும், அதிகாலை 3 மணிக்கு 36 ஆகவும் குறைந்தது, அதன் பிறகு LNJP மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர்." கட்சி கூறியது.

"கடந்த ஐந்து நாட்களாக எதுவும் சாப்பிடாமல், டெல்லியின் பங்கு தண்ணீரை ஹரியானா அரசு விடுவிக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். LNJP-யில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 21 அன்று அதிஷி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.