425 பேர் வரை மோசடி மற்றும் பணமோசடி குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் 10 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை (7.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இழந்ததாக காவல்துறை கூறியதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 103 சந்தேக நபர்கள் கடன் மோசடிகள் மற்றும் கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் அனைவருக்கும் எதிரான விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.