கொல்கத்தா, மத்திய கொல்கத்தாவின் வணிக மையமான புர்ராபஜாரில் உள்ள மேத்தா கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாலை 4.20 மணியளவில் தொடங்கிய தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இக்கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரும் தீவிபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.

கடந்த பதினைந்து நாட்களில் நகரில் நடந்த நான்காவது தீ விபத்து இதுவாகும்.