பெஷாவர், வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு நடவடிக்கைகளில் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய தளபதிகள் உட்பட ஒன்பது பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லக்கி மார்வாட் மற்றும் கைபர் மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கைபர் பழங்குடியினர் மாவட்டத்தில் தீரா பள்ளத்தாக்கு நடவடிக்கையில் கொல்லப்பட்ட ஏழு பயங்கரவாதிகளில் கமாண்டர்கள் நஜீப் என்ற அப்துர் ரஹ்மான் மற்றும் அஷ்ஃபாக் என்ற முய்வியா ஆகியோர் அடங்குவர்.

லக்கி மார்வாட் நடவடிக்கையில், அப்பகுதியில் உள்ள ஒரு பயங்கரவாத வளாகத்தை குறிவைத்து படைகள் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், படைகளின் வாகனங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக படையினரால் தேடப்பட்டு வந்தனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.