மும்பை, சான்டாக்ரூஸ் மேற்கு பகுதியில் உள்ள குடிசை ஒன்றில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 25 வயது கட்டிடத் தொழிலாளி காயமடைந்தார்.

கோலிபார் சாலையில் உள்ள அம்பேவாடி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"கட்டுமானத் தளத்தில் தொழிலாளர்களுக்கான குடிசையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் தீயை அணைக்கத் தொடங்கினர், ஆனால் ஒரு சிலிண்டர் திடீரென வெடித்தது," என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் காயம் அடைந்தார் என்றும் அவர் கூறினார்.

தகவல் அறிந்ததும் தண்ணீர் டேங்கர் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. காயமடைந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.