குடகு (கர்நாடகா), ஸ்ரீமங்கலா வனவிலங்கு பகுதியில் யானை தாக்கியதில் 50 வயது முதியவர் திங்கள்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொன்னம்பேட் தாலுக்காவில் உள்ள பீருகா என்ற இடத்தில் காலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

"மடிக்கேரி வனவிலங்கு பிரிவுக்கு உட்பட்ட ஸ்ரீமங்கல வனவிலங்கு பகுதியில் யானை தாக்கி ஒருவர் இறந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எங்கள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்" என்று மூத்த வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தையடுத்து, யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.