மஹோபா (உ.பி.), செவ்வாயன்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உட்பட நான்கு பேர் தீயில் கருகி இறந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மஹோபா மாவட்டத்தின் ஸ்ரீநகர் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர்-பெலாட்டல் சாலையில் அதிவேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை கண்காணிப்பாளர் அபர்ணா குப்தா தெரிவித்தார். இரண்டு பைக்குகளும் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

பைக்கில் பயணித்த நால்வரில் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் -- ராஜ் (8), லலிதேஷ் (22) -- தீயில் கருகி இறந்தனர். தேவேந்திரா (8) மற்றும் நேஹா (25) ஆகியோர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானதாக குப்தா கூறினார்.

மற்றொரு பைக்கில் பயணம் செய்த சந்திரபான் (40), சுனில் ராஹி (22) ஆகியோரும் விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர் என்று குப்தா மேலும் கூறினார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.