புது தில்லி, குவைத் நகரில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என நம்பப்படுகிறது.

குவைத்துக்கான இந்தியத் தூதர் தீ விபத்து ஏற்பட்ட முகாமை பார்வையிட்டுள்ளார்.

ஜெய்சங்கர், "மேலும் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவாகவும் பூரண குணமடையவும் வாழ்த்துகிறேன்" என்றார்.

"எங்கள் தூதரகம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முழு உதவியை வழங்கும்," என்று அவர் கூறினார்.