திபு (அஸ்ஸாம்), அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 23 வயது பெண் அடையாளம் தெரியாத ஆசாமியால் அவரது வீட்டிற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

அதிகாலை 1 மணியளவில் திபு-லும்டிங் சாலையில் அர்லாங்லாங்சோ அருகே உள்ள வீட்டிற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, அவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதில் ஷுகுரி டிப்சி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளியை பிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் போராளி ஒருவரை திருமணம் செய்து பின்னர் பிரிந்து சென்றதாக நம்பப்படும் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.